வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

பர்வதமலை - 3




ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-----------------------------------------------

சமாதி லிங்கங்களை வழிபட்டுட்டு , அப்படியே

 நடக்கஆரம்பிச்சேன் , அவ்ளோ அடர்ந்த வனம் 
இல்லை , மரங்கள்இருந்துது ஆனா அவ்ளோ 
குளிர்ச்சி இல்லை , ஒத்தை அடி பாதை ,கரடு 
முரடான கற்கள் என்று வெறும் காலில் நடப்பது 
என்பது சற்றுசிரமமான ஒண்ணா தான் இருந்துச்சு , 
ஆனா கிரிவலம் போறாமாதிரி இல்லை , அங்க நாம
 நடக்கும் போது , ஒரு பத்துநிமிஷத்துக்கு 
ஒருத்தரையாவது பாக்கலாம் , இங்க அப்படிஇல்லை ,
 துப்புரவா யாருமே இல்லை , நம்ம திரு . நாயார் 
இருந்தாகூட தேவலாம் போல இருந்துது , நடக்க
 நடக்க நல்ல வியர்வைவர ஆரம்பிச்சது , சட்டைய
 கழட்டி தோள்ள போட்டுகிட்டு நடக்கஆரம்பிச்சேன் 
வீரபத்திரன் கோயில் பூசாரி சொன்னா மாதிரி 
ஒருஇடத்துல மொட்டை பெரிய சைஸ் பாறை இருந்துது 
,பக்கதுலையே கொஞ்சம் போல ஊற்று மாதிரி தண்ணி
 வந்துட்டுஇருந்துது , தண்ணி பட்டு பட்டு பாறையும்
 கொஞ்சம் போலசில்லுனு இருந்துது , மலை ஏற்றது
 முதல் அனுபவம் , அதுவும்இல்லாம தனியா 
காட்டுக்குள்ள போறது கொஞ்சம் த்ரில்லாஇருந்துது ,
 ஆனா கொஞ்சம் பயமாவும் இருந்துது , 
சரி கொஞ்சம்படுப்போம்னு படுத்துட்டு , பிறகு 
அவர் சொன்ன குழிகள தேடினேன்அங்க அங்க 
இருந்துது , எல்லாமே கொஞ்சம் பச்சை கலராஇருந்துது ,
 அது மூலிகையா இல்லை பாசியானு தெரியல ,
இருந்தாலும் கொஞ்சம் போல உறிஞ்சி குடிச்சிட்டேன் , 
மலைங்க ,காடுகள் இங்க எல்லாம் போனா இத மாதிரி 
தண்ணிய மிருகங்ககுடிக்கறது போல நேரா 
குடிச்சோம்னாஅதுவே ஒரு தனிசுகமாதான் இருக்கும் , 
சமீபத்துல பொதிகை மலை போனப்ப கூடஇத மாதிரி
 குடிச்சி குதூகலமா இருந்தோம் நானும் நம்ம சிவாவும் .

ஒரு பத்து , பதினஞ்சி நிமிஷம் கழிச்சி , அங்க இருந்து

 திரும்பவும்மேல ஏற ஆரம்பிச்சேன் , இதுக்கு மேல 
ஏற்றது கொஞ்சம்சிரமமாதான் இருந்தது , இருந்தாலும் , 
பெரியவர் குடுத்த ஊக்கம் ,சொன்ன இடங்கள் பாக்க 
ஆவலா இருந்ததால , மூச்ச புடிச்சி கிட்டுமேல ஏற 
ஆரம்பிச்சேன் , சீக்கிரமே வந்துடிச்சு முக்கூடல் , 
அங்கநின்னு மலைய பாத்து ஒரு கும்பிடு போட்டுட்டு 
அப்படியேதிரும்பவும் அந்த நேட்டான பாதைல ஏற 
ஆரம்பிச்சேன் , அப்படிஇப்படின்னு அசைஞ்சி , ஒரு 
வழியா கடப்பாரை நெட்டுஆரம்பிக்கிற இடத்துக்கு 
வந்தாச்சு , வாழ்க்கைல முதல் தடவையாகடப்பாரை 
எல்லாம் புடிச்சிட்டு ஒரு சாகசமான பயணம்பண்ணபோரோம்னு , சுறுசுறுப்பாஆகிட்டேன் .

இங்க ஒரு சின்ன விஷயம் , இந்த முதல் பயணத்துக்கும் 

அடுத்துஅடுத்து போனதுக்கும் , கொஞ்சம் வித்யாசம்
 இருந்தது , ஏன்னாஇங்க இருந்த கடப்பாரை எல்லாம் 
முதல் முறையும் அடுத்துசென்ற ஒரு நான்கைந்து முறையும் 
தான் கடப்பாரை முனைலவேல் மாதிரி இருந்தது , அதுக்கு அப்பறம் போன பயணங்கள்ள ,பக்த்தர்கள் எல்லாம்
 சேந்து இன்னும் நிறைய கடப்பாரைகளையும் ,
சங்கிலிகளையும் போட்டு இருந்தாங்க , அதே மாதிரி
 தண்டவாளபடில எல்லாம் முதல்ல தண்டவாளம் 
மாதிரியான அமைப்புமட்டும் தான் இருந்தது , ஏணி படினா
 , ஏணி மட்டும்தான் இருந்தது ,அதுல ஏற்றது என்பது 
த்ரில்லாவும் இருந்தது , கொஞ்சம் ரிஸ்க்கும்கூட , 
அதுக்கு அடுத்த அடுத்த பயணங்களில் கொஞ்சம்மாற்றங்கல் 
இருந்தது , அது பாதுகாப்புதான் , இருந்தாலும் சாகசபயணம் , 
அப்படி இப்படின்னு என்ன மாதிரி சுத்த வரகோஷ்ட்டிகளுக்கு 
மிஸ் பண்ண மாதிரிதான் .

சரி கடப்பாரை நெட்டுக்கு வருவோம் , கடப்பாரை 

எல்லாம்முதல்ல பிடிக்கும் போது கொஞ்சம் பக்கத்துல 
பக்கத்துல இருந்துதுஒரு நாலு அஞ்சு தாண்டின பிறகு
 எல்லாம் எட்டி பிடிக்கிறாமாதிரிதான் இருந்துது எட்டி கூட
 பிடிச்சிடலாம் போல மேல கால்வைக்க சின்ன குழி 
இல்லனா ஒரு க்றிப் கூட இல்லை , 
என்னடாஇது சாகசமா நினச்சு வந்தா இப்படி நடு 
வழில மாட்டிகிட்டோமேனுரொம்ப பொறுமையா
 க்றிப் கிடைக்கிற இடமா பாத்து பாத்து பிடிச்சிஏர்றதுக்கு
 தடுமாற்றமா தான் இருந்தது , ஹ்ம்ம் ஏறியாச்சுஒருவழியா ,
 அடுத்து ஏணி , நல்லா துரு பிடிச்சி கொஞ்சம் அழுத்திகால்
 வெச்சா உடைஞ்சிடும் போல இருந்துது , 
ஆனா கால் வெச்சிஏறும் போது தான் தெரிஞ்சிது 
அது எவ்ளோ ஒரு உறுதியானஇரும்புனு , ரொம்ப 
எடை அதிகமாவும் இருக்கும் போல , எந்தபுண்ணியவான்
 தூக்கிட்டு வந்து வெச்சாருன்னு தெரியல , நம்மஏர்றதுக்கு
 பயன்படுது . கொஞ்சம் கொஞ்சமா மேல ஏறிபோனோம்னா
 அதுக்கு மேல இருக்குற பாதை எல்லாம் ரொம்பபாத்துதான்
 போகணும் கொஞ்சம் வழி தெரியாமமுன்னேறினாலும் 
அதல பாதாளம் தான் .

தீட்டு காரி மண்டபம் , ஒரு சின்ன தண்டவாள 

படியதாண்டினோம்னா வருது , பொதுவா அந்த 
மண்டபம் பத்திசொல்றது என்னன்னா , மலைக்கு
 ஏறி வர பெண்கள் மாத விளக்குஆகின்ற நேரத்துல
 இங்க தங்கிக்கலாம்னு சொல்லுவாங்க , ஆனாஇடம் 
பாத்தா வேற சில கோணத்துல யோசிக்க தோணும் ,
மாநன்னன் ஆண்ட காலத்துல இது வீரர்கள் , 
உளவுநோட்டமிடுபவர்கள் , அவர்களுக்கு 
சமையல் செய்றவங்க தங்கிறஇடமா இருந்திருக்கலாம் 
ஏன்னா இதுக்கு பக்கத்துல தான் பாதாளகிணறும் 
பாப்பாத்தி சுனைக்கு போற வழியும் இருக்கு ,
 இந்தபாப்பாத்தி தெயவத்த பத்தி சொல்லாம விட்டுட்டனே .

அதாவது , பழங்காலத்துல ஒரு ஆச்சாரமான 

பிராமண தம்பதியர்திருவண்ணாமலைய்க்கு 
வந்தப்போ , பர்வதமலை பத்தி கேள்விபட்டு இங்க 
வந்து இருக்காங்க , இப்பவே இப்படி இருக்கு 
நான்சொல்ற இப்பங்க்றது தொண்ணூறாம் வருஷம் )
 அப்போ அதாவதுஒரு ஆயிரம் வருஷத்துக்கு முன்ன 
எப்படி இருந்து இருக்கும் ,ரொம்ப கஷ்டப்பட்டு ஏறி 
தரிசனம் பாத்துட்டு வரும் போது அந்தபிராமண 
பெண்ணோட கணவர் தவறி விழுந்துட்டு இருக்காரு 
,உயிர் பிரிஞ்சிடிச்சு , அந்த பெண் ரொம்ப ஆச்சாரமான 
குடும்பத்துலஇருந்து வந்ததால சாவித்திரி போல சாமி
 கிட்ட சண்டையே போடஆரம்பிச்சிட்டாங்களாம் ,
 உன்னை பாக்க வந்து தான இப்படி ஆச்சு ,ஒன்னு என்னோட
 பதிய உயிரோட திரும்ப குடு , இல்லைனாஎன்னையும்
 இங்கியே சாக அடிச்சிடுனு பெரிய வைராக்கியத்தோட
கேட்டாங்கலாம் , சாமி கிட்ட இருந்து எந்த பதிலும் 
காணோம் , சரிஇங்கியே உன்னோட இடத்திலையே 
என்னோட உசுரும்போகட்டும்னு கீழ குதிச்சிட்டாங்கலாம் , 
இத மாதிரி ஒருகற்புக்கரசிய சாமி சும்மா விடுமா ,
 இல்லை அத மாதிரி ஒருபெண்ணோட 
சாபம்தான் சாமியையே ஆட்டி வெச்சிடாதா ,
 சாமியும்இறங்கி வந்து அவங்கள விழுந்த 
இடத்துல இருந்து உயிர் பித்துசொன்னாங்களாம் , " உன்னோட கணவரின் புண்ணிய பலம் தான்இங்க 
வந்து அவர் உயிர் பிரிய காரணம் , இங்க உயிர் பிரிஞ்ச
 தாள ,அவருக்கும் மோட்சம் என்கின்ற பிறவா நிலை 
கிடச்சிடிச்சி , இதுலநீ துக்கமோ துயரமோ பட எதுவும் 
இல்லை , ஒரு பதிவிரதைகணவன் மோட்சம் அடையறதுக்கு 
பாடுபடுவது கூட அவளின்முக்கிய கடமைல ஒண்ணுதான் , 
அதனால நீ கலங்கி புலம்பஎதுவுமே இல்லை , 
உன்னுடைய விதியும் இங்க வந்துதான் எல்லாயோக
 முறையும் கற்று தேர்ந்து பிறவா நிலை அடையணும்னுஇருக்கு , 
இங்கு இருக்கும் சித்த புருஷர்கள் உனக்குஎல்லாவற்றையும் 
கற்று கொடுத்து , உன்னை நன்னிலை அடையவைப்பாங்க , 
அதுவரை நீ உன்னுடைய கணவரயும் சூட்சுமமாஉணரலாம் " 
அப்படின்னு சொல்லி அருள் புரிஞ்சாங்கலம் 
அந்தபிரம்மராம்பிகை தாய் . அவங்களும் சித்த 
பெருமான்கள் கிட்டமுறையா எல்லாம் தெரிஞ்சிகிட்டாங்கலாம் 
அதே மாதிரிபதினெட்டு சித்தருக்கும் அங்க லிங்க வடிவுல
 சிலை வெச்சி வழிபட்டாங்களாம் , கொஞ்சம் சமயோஜிதமா 
யோசிச்சி கொஞ்சம்பதிய உத்து பாத்து போனோம்னா 
அத நம்மளும் பாக்கலாம் ,பொதுவா யாரும் இந்த 
விஷயம் தெரியாததால அந்த இடத்துல இதகவனிக்கற
து இல்லை , அந்த அம்மா அங்கையே தங்கிஇருந்ததால 
அந்த சுனைக்கும் அந்த இடத்துக்கும் , பாப்பாத்திசுனைன்னு
 பேரு , அதுவும் இல்லாம அவ்ளோ கரடு முரடானஇடத்துல
கூட , என்னதான் வெய்யில் அடிச்சாலும் 
அந்த ஒரு இடம்மட்டும் அவ்ளோ ஒரு 
இதமா அமைதியா இருக்கும் , பல பேர் 
அதநல்லா உணர்ந்து இருப்பாங்க , ஆனா 
மேட்டர் தெரியாம இருந்துஇருக்கும் . மலைல எங்க தண்ணி இல்லாம இருந்தாலும் 
இங்ககண்டிப்பா இருக்கும் .

அந்த பாதாள கிணறு , பேரு வெச்சாலும்

வெச்சாங்க இப்படியா ,பயங்கர ஆழம் , 
அனேகமா இதுவும் நன்னன் காலத்தியதாதான்இருக்கும் , 
இந்த காலத்துல அதுவும் அந்த இடத்துல
 கிணறுதோன்றது ரொம்ப கஷ்டம் , 
இதுலயும் ஒரு விஷயம் இருக்கு ,
கிணத்துக்குள்ள கீழ இறங்கினோம்னா ,
 ஒரு சுரங்க வழிஇருகரதாகவும் அதுக்குள்ள 
போனோம்னா பலவிதமான மலர்கள் ,மூலிகைகள் ,
 மரங்கள் , பழங்கள் கொண்ட பெரிய தோட்டமும் ,
அங்க சித்த புருஷர்கள் சாதனைல இருகர்தாகவும் 
கேள்வி பட்டுஇருக்கேன் , ஒரு முறை நிறைய டூல்ஸ் ,
 கயிறு எல்லாம்எடுத்துட்டு போய் , நண்பர்கள் 
ஒரு பத்து பேர் போய் இறங்கிபாத்தோம் , 
ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல போக 
முடியல ,கொஞ்சம் பயமும் காரணம் .

சரி நம்ம இதுக்கு மேல சந்நிதானத்துக்கு

 போவோம் . ஆகாய பாதைரொம்பவே திகிலான 
இடம் தான் இது இடது பக்கம் கொஞ்சம்திரும்பி 
பாத்தாலும் ஒரு அடி எடுத்து வைக்க தோணாது ,
 முழுக்கமுழுக்க பள்ளம் , கொஞ்சம் கால் இடறினாலும்
 அவ்ளோதான் சீன்ஆய்டுவோம் , அதுவும் அப்போ
 சுத்தமா ஒரு சங்கிலியோ , இல்லைஒரு சப்போர்ட்டோ 
இருக்காது , வலது பக்கம் இருக்குற பாறையபிடிச்சிகிட்டு
 தான் மெல்ல நகர்ந்து போக முடியும் , 
இப்பஎவ்ளோவோ தேவலாம் ( நான் கடைசியா
 இங்க போனதுஇரண்டாயிரத்துல , இப்ப எப்படி 
இருக்குனு தெரியல ரொம்பவேமாறிட்டதா 
கேள்வி பட்டேன்) , அந்த கொஞ்ச தூரத்த கடக்கும்
 பாடுஇருக்கே 
அப்பா சொல்லி மாளாது , இத தாண்டிட்டோம்னா ,
அப்பா....... மலை உச்சி , சும்மா நச்சுனு இருக்கும் , 
முதல்ல ஒருகுட்டி மலை மேடு அத தாண்டினா சந்நிதானம்.

KADAPARAI NETTU ( 1995 )






அடுத்த பதிவுல சந்நிதானம் , கோமண சாமியார் , அம்மாவோடஅழகு எல்லாம் பாக்கலாம் .


ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி