வியாழன், 20 அக்டோபர், 2011

சித்தர் பாடல்களின் உள்ளடக்கம்



 பதிப்பிக்கப்படாத,தொகுக்கப்படாத
சித்தர்பாடல்கள் பலவும் பழம்பனைஓலைகளில்
இன்றும் எங்கோ நாம் கண்டுபிடிக்க காத்திருக்கின்றன
என்றே தோன்றுகின்றது.

சித்தர்கள் தங்கள் பாடல்களை
எளிமையான,மிக எளிமையான
நாட்டு தமிழில் ,நாட்டுப்பாடல்களை ஒத்த
நடையில் நமக்களித்தனர்

எனினும் அவர்கள்தம் எளிமையான
பாடல்கள் வழியாக தாங்கள்
சொல்ல நினைத்த விஷயங்களை
குறிஈடுகளாகவே
சொல்லிவைத்தார்கள்.

மேலோட்டமான பார்வையில்
இப்பாடல்கள் எளிமையாக
இருப்பினும் அவைஉண்மையில்
 எளிதில் புரிந்துகொள்ளமுடியாத
அறிந்துகொள்ளமுடியாத
சித்த,சித்தாந்தங்களை உள்ளடக்கமாக
கொண்டவை.

இந்த சித்த சித்தாந்தங்கள்
சித்தர்களால், நாம்
எளிதில் புரிந்துகொள்ளமுடியாதபடி, 
அறிந்துகொள்ளமுடியாதபடி
சித்தர் பாடல்களில் பொதிந்து
வைக்கப்பட்டன.

-ரத்னம்ஜி



புதன், 19 அக்டோபர், 2011

சித்தர் பாடல்கள்





சித்தர்கள் பற்றி ஆதாரபூர்வமாக எழுதப்பட்ட
நூல்கள் ஏதுமில்லை.அப்படியே  இருப்பினும்
அவைகளனைத்தும் நம்பதகுந்ததான,
 ஆதரபூர்வமான,முழுமையான நூல்களாக
 இல்லை .

நம்பதகுந்ததான, ஆதரபூர்வமான,முழுமையான 
சித்தர் நூல்களே இல்லை என்பதே
இன்றைக்கு நூற்றுக்கணக்கான,ஆயிரக்கணக்கான
சித்தர் பற்றிய நூல்கள் புற்றீசல் என
புறப்பட காரணமானது .


சித்தர்கள் அன்றும்,இன்றும்,என்றும்
வினாக்களுக்கும் வியப்புகளுக்கும்
உட்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.

தங்கள் பாடல்களையே தம் அளப்பரிய
சொத்துக்களாக நம்மிடயே விட்டுசென்றார்கள்.

அந்த சித்தர்கள் பாடல்களே இன்று நம்மக்கு
சித்தர்களை யார்  என்று அடையாளம் காட்டுகிறது

சித்தர் பாடல்கள் அனைத்துமே செவி வழி பாடல்களாகவே
வழி வழியாகவே காக்கப்பட்டு வாய்மொழி பாடல்களாகவே
நிலை நிறுத்தப்பட்டு, பின் ஓலைசுவடிகளில் எழுதப்பட்டு
தொகுக்கப்பட்டன.

இன்றுநாம் சித்தர் பாடல்கள் என்று நாம்
கொண்டாடும் பாடல்கள் அனைத்துமே
பல்வேறு காலகட்டங்களில்
 எழுதப்பட்டு ,சித்தர்கள் அல்லாத
பலரால் தொகுக்கப்பட்டவையே.

தஞ்சை சரஸ்வதி மஹால் நூல் நிலையமும்
சென்னை அரசினர்  கீழ்த்திசை சுவடி நூல் நிலையமும்
சென்னை கன்னிமாரா நூல் நிலையமும்
சென்னை பல்கலைகழக நூல்  நிலையமும்
இன்றளவும் நமக்கென இந்த சித்தர்
செல்வங்களை காத்து காப்பற்றிவருகின்றன.

சற்றேறக்குறைய ஐந்து தொகுதிகளாக
பதிக்கப்பட்ட சித்தர் பாடல்களே
நமக்கு அவர்தம் நெறிகளையும்
வாழ்நாள் குறிப்புகளையும்
கோடிட்டு காட்டுகின்றன.


-ரத்னம்ஜி

வியாழன், 13 அக்டோபர், 2011

சித்தர்கள் பல பிரிவினர்



விருப்பு வெறுப்பின்றி  வெகுளியின்றி
அழுக்காறு காமமின்றி பொய்யின்றி
 மெய்யையே வாய்மையால் வளர்த்து
அஷ்டமாசித்திகளை பெற்று
சரியை  கிரியை யோகம் ஞானம்
எனும் நெறி நின்று சித்தத்தை
ஆளும் முறை கண்டோரே சித்தர்கள்.

சித்தர்கள் பல பிரிவினர்
ஞான சித்தர்கள்
நாத சித்தர்கள்
ராஜேஸ்வர சித்தர்கள்
வாலை சித்தர்கள்
என்று பல பிரிவுகளில்
பல்லாயிரக்கணக்கில்
எண்ணற்ற சித்தர்கள்
வாழ்ந்த நன்னாடே   நம்நாடு.

-ரத்னம்ஜி

வியாழன், 6 அக்டோபர், 2011

சித்தர்கள்- ஒரு முன்னோட்டம்-2





சித்தர்கள் என்போரே மாண்புடை மாந்தர்கள்
சித்தத்தை தன்வயப்படுத்தி மோனத்தில்
நின்றோர்களே சித்தர்கள்.

நல் இயலை மாந்தர்தம் வாழ்வியலில் புகுத்தி
அவர்தம் அன்றாட வாழ்வில் மேம்பாடு
காண தமை வருத்தி வாழ்ந்தோர்தாம் சித்தர்கள்.

சித்தர் பாடல்கள் மிக எளிமையான வார்த்தைகளால்
வார்க்கப்படிருந்தாலும் அவற்றின் பொருள்கள்
என்றும் புரிய புதிர்களாகவே நிலை கண்டுள்ளன.

இவர்கள் தங்கள் சித்தத்தையே தங்களுக்குள்
நிலை கொண்ட பரம்பொருளாக கண்டார்கள்.

-ரத்னம்ஜி









செவ்வாய், 4 அக்டோபர், 2011

சித்தர்கள்- ஒரு முன்னோட்டம்




சித்தர்கள் எனும் பதமே தமிழின் தனிச்சொத்து.
ஆங்கிலம் உட்பட்ட ஏனய பிற மொழிகளில்
சித்தர்கள் எனும் சொல்லிற்கு ஈடான சொல் ஏதுமில்லை.

சித்தர்கள் சாதி மத பேதமற்ற தமிழ் மூத்த தமிழ் மூதறிவாளர்கள்.
பிற்காலத்தில் தமிழர்களாலேயே தள்ளி வைக்கப்பட்ட தமிழறிவாளர்கள்.

தமிழுக்கென தமிழர்களால் தொகுக்கப்பட்ட தமிழ் திருமுறை
திருமறை தொகுப்புக்களில் அவர்களுக்கு இடமில்லை.

பிறமொழிக்கலப்பில்லா செந்தமிழில் எழுதப்பட்ட
சித்தர்தம் செம்மொழிக்கு சிறப்பே அதன்
பொருளடக்கமும் எளிய சொல்லட்சியுமே.

--_ரத்னம்ஜி