பதிப்பிக்கப்படாத,தொகுக்கப்படாத
சித்தர்பாடல்கள் பலவும் பழம்பனைஓலைகளில்
இன்றும் எங்கோ நாம் கண்டுபிடிக்க காத்திருக்கின்றன
என்றே தோன்றுகின்றது.
சித்தர்கள் தங்கள் பாடல்களை
எளிமையான,மிக எளிமையான
நாட்டு தமிழில் ,நாட்டுப்பாடல்களை ஒத்த
நடையில் நமக்களித்தனர்
எனினும் அவர்கள்தம் எளிமையான
பாடல்கள் வழியாக தாங்கள்
சொல்ல நினைத்த விஷயங்களை
குறிஈடுகளாகவே
சொல்லிவைத்தார்கள்.
மேலோட்டமான பார்வையில்
இப்பாடல்கள் எளிமையாக
இருப்பினும் அவைஉண்மையில்
எளிதில் புரிந்துகொள்ளமுடியாத
அறிந்துகொள்ளமுடியாத
சித்த,சித்தாந்தங்களை உள்ளடக்கமாக
கொண்டவை.
இந்த சித்த சித்தாந்தங்கள்
சித்தர்களால், நாம்
எளிதில் புரிந்துகொள்ளமுடியாதபடி,
அறிந்துகொள்ளமுடியாதபடி
சித்தர் பாடல்களில் பொதிந்து
வைக்கப்பட்டன.
-ரத்னம்ஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக