சித்தர்கள் பற்றி ஆதாரபூர்வமாக எழுதப்பட்ட
நூல்கள் ஏதுமில்லை.அப்படியே இருப்பினும்
அவைகளனைத்தும் நம்பதகுந்ததான,
ஆதரபூர்வமான,முழுமையான நூல்களாக
இல்லை .
நம்பதகுந்ததான, ஆதரபூர்வமான,முழுமையான
அவைகளனைத்தும் நம்பதகுந்ததான,
ஆதரபூர்வமான,முழுமையான நூல்களாக
இல்லை .
சித்தர் நூல்களே இல்லை என்பதே
இன்றைக்கு நூற்றுக்கணக்கான,ஆயிரக்கணக்கான
சித்தர் பற்றிய நூல்கள் புற்றீசல் என
புறப்பட காரணமானது .
சித்தர்கள் அன்றும்,இன்றும்,என்றும்
வினாக்களுக்கும் வியப்புகளுக்கும்
வினாக்களுக்கும் வியப்புகளுக்கும்
உட்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.
தங்கள் பாடல்களையே தம் அளப்பரிய
சொத்துக்களாக நம்மிடயே விட்டுசென்றார்கள்.
அந்த சித்தர்கள் பாடல்களே இன்று நம்மக்கு
சித்தர்களை யார் என்று அடையாளம் காட்டுகிறது
சித்தர் பாடல்கள் அனைத்துமே செவி வழி பாடல்களாகவே
வழி வழியாகவே காக்கப்பட்டு வாய்மொழி பாடல்களாகவே
நிலை நிறுத்தப்பட்டு, பின் ஓலைசுவடிகளில் எழுதப்பட்டு
தொகுக்கப்பட்டன.
இன்றுநாம் சித்தர் பாடல்கள் என்று நாம்
கொண்டாடும் பாடல்கள் அனைத்துமே
பல்வேறு காலகட்டங்களில்
எழுதப்பட்டு ,சித்தர்கள் அல்லாத
பலரால் தொகுக்கப்பட்டவையே.
தஞ்சை சரஸ்வதி மஹால் நூல் நிலையமும்
சென்னை அரசினர் கீழ்த்திசை சுவடி நூல் நிலையமும்
சென்னை கன்னிமாரா நூல் நிலையமும்
சென்னை பல்கலைகழக நூல் நிலையமும்
இன்றளவும் நமக்கென இந்த சித்தர்
செல்வங்களை காத்து காப்பற்றிவருகின்றன.
சற்றேறக்குறைய ஐந்து தொகுதிகளாக
பதிக்கப்பட்ட சித்தர் பாடல்களே
நமக்கு அவர்தம் நெறிகளையும்
வாழ்நாள் குறிப்புகளையும்
கோடிட்டு காட்டுகின்றன.
-ரத்னம்ஜி
கோடிட்டு காட்டுகின்றன.
-ரத்னம்ஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக