ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றிஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-----------------------------------------------
சமாதி லிங்கங்களை வழிபட்டுட்டு , அப்படியே
நடக்கஆரம்பிச்சேன் , அவ்ளோ அடர்ந்த வனம்
இல்லை , மரங்கள்இருந்துது ஆனா அவ்ளோ
குளிர்ச்சி இல்லை , ஒத்தை அடி பாதை ,கரடு
முரடான கற்கள் என்று வெறும் காலில் நடப்பது
என்பது சற்றுசிரமமான ஒண்ணா தான் இருந்துச்சு ,
ஆனா கிரிவலம் போறாமாதிரி இல்லை , அங்க நாம
நடக்கும் போது , ஒரு பத்துநிமிஷத்துக்கு
ஒருத்தரையாவது பாக்கலாம் , இங்க அப்படிஇல்லை ,
துப்புரவா யாருமே இல்லை , நம்ம திரு . நாயார்
இருந்தாகூட தேவலாம் போல இருந்துது , நடக்க
நடக்க நல்ல வியர்வைவர ஆரம்பிச்சது , சட்டைய
கழட்டி தோள்ள போட்டுகிட்டு நடக்கஆரம்பிச்சேன்
, வீரபத்திரன் கோயில் பூசாரி சொன்னா மாதிரி
ஒருஇடத்துல மொட்டை பெரிய சைஸ் பாறை இருந்துது
,பக்கதுலையே கொஞ்சம் போல ஊற்று மாதிரி தண்ணி
வந்துட்டுஇருந்துது , தண்ணி பட்டு பட்டு பாறையும்
கொஞ்சம் போலசில்லுனு இருந்துது , மலை ஏற்றது
முதல் அனுபவம் , அதுவும்இல்லாம தனியா
காட்டுக்குள்ள போறது கொஞ்சம் த்ரில்லாஇருந்துது ,
ஆனா கொஞ்சம் பயமாவும் இருந்துது ,
சரி கொஞ்சம்படுப்போம்னு படுத்துட்டு , பிறகு
அவர் சொன்ன குழிகள தேடினேன், அங்க அங்க
இருந்துது , எல்லாமே கொஞ்சம் பச்சை கலராஇருந்துது ,
அது மூலிகையா இல்லை பாசியானு தெரியல ,
இருந்தாலும் கொஞ்சம் போல உறிஞ்சி குடிச்சிட்டேன் ,
மலைங்க ,காடுகள் இங்க எல்லாம் போனா இத மாதிரி
தண்ணிய மிருகங்ககுடிக்கறது போல நேரா
குடிச்சோம்னாஅதுவே ஒரு தனிசுகமாதான் இருக்கும் ,
சமீபத்துல பொதிகை மலை போனப்ப கூடஇத மாதிரி
குடிச்சி குதூகலமா இருந்தோம் நானும் நம்ம சிவாவும் .
ஒரு பத்து , பதினஞ்சி நிமிஷம் கழிச்சி , அங்க இருந்து
திரும்பவும்மேல ஏற ஆரம்பிச்சேன் , இதுக்கு மேல
ஏற்றது கொஞ்சம்சிரமமாதான் இருந்தது , இருந்தாலும் ,
பெரியவர் குடுத்த ஊக்கம் ,சொன்ன இடங்கள் பாக்க
ஆவலா இருந்ததால , மூச்ச புடிச்சி கிட்டுமேல ஏற
ஆரம்பிச்சேன் , சீக்கிரமே வந்துடிச்சு முக்கூடல் ,
அங்கநின்னு மலைய பாத்து ஒரு கும்பிடு போட்டுட்டு
அப்படியேதிரும்பவும் அந்த நேட்டான பாதைல ஏற
ஆரம்பிச்சேன் , அப்படிஇப்படின்னு அசைஞ்சி , ஒரு
வழியா கடப்பாரை நெட்டுஆரம்பிக்கிற இடத்துக்கு
வந்தாச்சு , வாழ்க்கைல முதல் தடவையாகடப்பாரை
எல்லாம் புடிச்சிட்டு ஒரு சாகசமான பயணம்பண்ணபோரோம்னு , சுறுசுறுப்பாஆகிட்டேன் .
இங்க ஒரு சின்ன விஷயம் , இந்த முதல் பயணத்துக்கும்
அடுத்துஅடுத்து போனதுக்கும் , கொஞ்சம் வித்யாசம்
இருந்தது , ஏன்னாஇங்க இருந்த கடப்பாரை எல்லாம்
முதல் முறையும் அடுத்துசென்ற ஒரு நான்கைந்து முறையும்
தான் கடப்பாரை முனைலவேல் மாதிரி இருந்தது , அதுக்கு அப்பறம் போன பயணங்கள்ள ,பக்த்தர்கள் எல்லாம்
சேந்து இன்னும் நிறைய கடப்பாரைகளையும் ,
சங்கிலிகளையும் போட்டு இருந்தாங்க , அதே மாதிரி
தண்டவாளபடில எல்லாம் முதல்ல தண்டவாளம்
மாதிரியான அமைப்புமட்டும் தான் இருந்தது , ஏணி படினா
, ஏணி மட்டும்தான் இருந்தது ,அதுல ஏற்றது என்பது
த்ரில்லாவும் இருந்தது , கொஞ்சம் ரிஸ்க்கும்கூட ,
அதுக்கு அடுத்த அடுத்த பயணங்களில் கொஞ்சம்மாற்றங்கல்
இருந்தது , அது பாதுகாப்புதான் , இருந்தாலும் சாகசபயணம் ,
அப்படி இப்படின்னு என்ன மாதிரி சுத்த வரகோஷ்ட்டிகளுக்கு
மிஸ் பண்ண மாதிரிதான் .
சரி கடப்பாரை நெட்டுக்கு வருவோம் , கடப்பாரை
எல்லாம்முதல்ல பிடிக்கும் போது கொஞ்சம் பக்கத்துல
பக்கத்துல இருந்துது, ஒரு நாலு அஞ்சு தாண்டின பிறகு
எல்லாம் எட்டி பிடிக்கிறாமாதிரிதான் இருந்துது எட்டி கூட
பிடிச்சிடலாம் போல மேல கால்வைக்க சின்ன குழி
இல்லனா ஒரு க்றிப் கூட இல்லை ,
என்னடாஇது சாகசமா நினச்சு வந்தா இப்படி நடு
வழில மாட்டிகிட்டோமேனுரொம்ப பொறுமையா
க்றிப் கிடைக்கிற இடமா பாத்து பாத்து பிடிச்சிஏர்றதுக்கு
தடுமாற்றமா தான் இருந்தது , ஹ்ம்ம் ஏறியாச்சுஒருவழியா ,
அடுத்து ஏணி , நல்லா துரு பிடிச்சி கொஞ்சம் அழுத்திகால்
வெச்சா உடைஞ்சிடும் போல இருந்துது ,
ஆனா கால் வெச்சிஏறும் போது தான் தெரிஞ்சிது
அது எவ்ளோ ஒரு உறுதியானஇரும்புனு , ரொம்ப
எடை அதிகமாவும் இருக்கும் போல , எந்தபுண்ணியவான்
தூக்கிட்டு வந்து வெச்சாருன்னு தெரியல , நம்மஏர்றதுக்கு
பயன்படுது . கொஞ்சம் கொஞ்சமா மேல ஏறிபோனோம்னா
அதுக்கு மேல இருக்குற பாதை எல்லாம் ரொம்பபாத்துதான்
போகணும் கொஞ்சம் வழி தெரியாமமுன்னேறினாலும்
அதல பாதாளம் தான் .
தீட்டு காரி மண்டபம் , ஒரு சின்ன தண்டவாள
படியதாண்டினோம்னா வருது , பொதுவா அந்த
மண்டபம் பத்திசொல்றது என்னன்னா , மலைக்கு
ஏறி வர பெண்கள் மாத விளக்குஆகின்ற நேரத்துல
இங்க தங்கிக்கலாம்னு சொல்லுவாங்க , ஆனாஇடம்
பாத்தா வேற சில கோணத்துல யோசிக்க தோணும் ,
மாநன்னன் ஆண்ட காலத்துல இது வீரர்கள் ,
உளவுநோட்டமிடுபவர்கள் , அவர்களுக்கு
சமையல் செய்றவங்க தங்கிறஇடமா இருந்திருக்கலாம்
, ஏன்னா இதுக்கு பக்கத்துல தான் பாதாளகிணறும்
பாப்பாத்தி சுனைக்கு போற வழியும் இருக்கு ,
இந்தபாப்பாத்தி தெயவத்த பத்தி சொல்லாம விட்டுட்டனே .
அதாவது , பழங்காலத்துல ஒரு ஆச்சாரமான
பிராமண தம்பதியர்திருவண்ணாமலைய்க்கு
வந்தப்போ , பர்வதமலை பத்தி கேள்விபட்டு இங்க
வந்து இருக்காங்க , இப்பவே இப்படி இருக்கு
( நான்சொல்ற இப்பங்க்றது தொண்ணூறாம் வருஷம் )
அப்போ அதாவதுஒரு ஆயிரம் வருஷத்துக்கு முன்ன
எப்படி இருந்து இருக்கும் ,ரொம்ப கஷ்டப்பட்டு ஏறி
தரிசனம் பாத்துட்டு வரும் போது அந்தபிராமண
பெண்ணோட கணவர் தவறி விழுந்துட்டு இருக்காரு
,உயிர் பிரிஞ்சிடிச்சு , அந்த பெண் ரொம்ப ஆச்சாரமான
குடும்பத்துலஇருந்து வந்ததால சாவித்திரி போல சாமி
கிட்ட சண்டையே போடஆரம்பிச்சிட்டாங்களாம் ,
உன்னை பாக்க வந்து தான இப்படி ஆச்சு ,ஒன்னு என்னோட
பதிய உயிரோட திரும்ப குடு , இல்லைனாஎன்னையும்
இங்கியே சாக அடிச்சிடுனு பெரிய வைராக்கியத்தோட
கேட்டாங்கலாம் , சாமி கிட்ட இருந்து எந்த பதிலும்
காணோம் , சரிஇங்கியே உன்னோட இடத்திலையே
என்னோட உசுரும்போகட்டும்னு கீழ குதிச்சிட்டாங்கலாம் ,
இத மாதிரி ஒருகற்புக்கரசிய சாமி சும்மா விடுமா ,
இல்லை அத மாதிரி ஒருபெண்ணோட
சாபம்தான் சாமியையே ஆட்டி வெச்சிடாதா ,
சாமியும், இறங்கி வந்து அவங்கள விழுந்த
இடத்துல இருந்து உயிர் பித்துசொன்னாங்களாம் , " உன்னோட கணவரின் புண்ணிய பலம் தான்இங்க
வந்து அவர் உயிர் பிரிய காரணம் , இங்க உயிர் பிரிஞ்ச
தாள ,அவருக்கும் மோட்சம் என்கின்ற பிறவா நிலை
கிடச்சிடிச்சி , இதுலநீ துக்கமோ துயரமோ பட எதுவும்
இல்லை , ஒரு பதிவிரதைகணவன் மோட்சம் அடையறதுக்கு
பாடுபடுவது கூட அவளின்முக்கிய கடமைல ஒண்ணுதான் ,
அதனால நீ கலங்கி புலம்பஎதுவுமே இல்லை ,
உன்னுடைய விதியும் இங்க வந்துதான் எல்லாயோக
முறையும் கற்று தேர்ந்து பிறவா நிலை அடையணும்னுஇருக்கு ,
இங்கு இருக்கும் சித்த புருஷர்கள் உனக்குஎல்லாவற்றையும்
கற்று கொடுத்து , உன்னை நன்னிலை அடையவைப்பாங்க ,
அதுவரை நீ உன்னுடைய கணவரயும் சூட்சுமமாஉணரலாம் "
அப்படின்னு சொல்லி அருள் புரிஞ்சாங்கலம்
அந்தபிரம்மராம்பிகை தாய் . அவங்களும் சித்த
பெருமான்கள் கிட்டமுறையா எல்லாம் தெரிஞ்சிகிட்டாங்கலாம்
, அதே மாதிரிபதினெட்டு சித்தருக்கும் அங்க லிங்க வடிவுல
சிலை வெச்சி வழிபட்டாங்களாம் , கொஞ்சம் சமயோஜிதமா
யோசிச்சி கொஞ்சம்பதிய உத்து பாத்து போனோம்னா
அத நம்மளும் பாக்கலாம் ,பொதுவா யாரும் இந்த
விஷயம் தெரியாததால அந்த இடத்துல இதகவனிக்கற
து இல்லை , அந்த அம்மா அங்கையே தங்கிஇருந்ததால
அந்த சுனைக்கும் அந்த இடத்துக்கும் , பாப்பாத்திசுனைன்னு
பேரு , அதுவும் இல்லாம அவ்ளோ கரடு முரடானஇடத்துல
கூட , என்னதான் வெய்யில் அடிச்சாலும்
அந்த ஒரு இடம்மட்டும் அவ்ளோ ஒரு
இதமா அமைதியா இருக்கும் , பல பேர்
அதநல்லா உணர்ந்து இருப்பாங்க , ஆனா
மேட்டர் தெரியாம இருந்துஇருக்கும் . மலைல எங்க தண்ணி இல்லாம இருந்தாலும்
இங்ககண்டிப்பா இருக்கும் .
அந்த பாதாள கிணறு , பேரு வெச்சாலும்
வெச்சாங்க இப்படியா ,பயங்கர ஆழம் ,
அனேகமா இதுவும் நன்னன் காலத்தியதாதான்இருக்கும் ,
இந்த காலத்துல அதுவும் அந்த இடத்துல
கிணறுதோன்றது ரொம்ப கஷ்டம் ,
இதுலயும் ஒரு விஷயம் இருக்கு ,
கிணத்துக்குள்ள கீழ இறங்கினோம்னா ,
ஒரு சுரங்க வழிஇருகரதாகவும் அதுக்குள்ள
போனோம்னா பலவிதமான மலர்கள் ,மூலிகைகள் ,
மரங்கள் , பழங்கள் கொண்ட பெரிய தோட்டமும் ,
அங்க சித்த புருஷர்கள் சாதனைல இருகர்தாகவும்
கேள்வி பட்டுஇருக்கேன் , ஒரு முறை நிறைய டூல்ஸ் ,
கயிறு எல்லாம்எடுத்துட்டு போய் , நண்பர்கள்
ஒரு பத்து பேர் போய் இறங்கிபாத்தோம் ,
ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல போக
முடியல ,கொஞ்சம் பயமும் காரணம் .
சரி நம்ம இதுக்கு மேல சந்நிதானத்துக்கு
போவோம் . ஆகாய பாதைரொம்பவே திகிலான
இடம் தான் இது இடது பக்கம் கொஞ்சம்திரும்பி
பாத்தாலும் ஒரு அடி எடுத்து வைக்க தோணாது ,
முழுக்கமுழுக்க பள்ளம் , கொஞ்சம் கால் இடறினாலும்
அவ்ளோதான் சீன்ஆய்டுவோம் , அதுவும் அப்போ
சுத்தமா ஒரு சங்கிலியோ , இல்லைஒரு சப்போர்ட்டோ
இருக்காது , வலது பக்கம் இருக்குற பாறையபிடிச்சிகிட்டு
தான் மெல்ல நகர்ந்து போக முடியும் ,
இப்பஎவ்ளோவோ தேவலாம் ( நான் கடைசியா
இங்க போனதுஇரண்டாயிரத்துல , இப்ப எப்படி
இருக்குனு தெரியல ரொம்பவேமாறிட்டதா
கேள்வி பட்டேன்) , அந்த கொஞ்ச தூரத்த கடக்கும்
பாடுஇருக்கே
அப்பா சொல்லி மாளாது , இத தாண்டிட்டோம்னா ,
அப்பா....... மலை உச்சி , சும்மா நச்சுனு இருக்கும் ,
முதல்ல ஒருகுட்டி மலை மேடு அத தாண்டினா சந்நிதானம்.
![]() |
KADAPARAI NETTU ( 1995 ) |
![]() |
அடுத்த பதிவுல சந்நிதானம் , கோமண சாமியார் , அம்மாவோடஅழகு எல்லாம் பாக்கலாம் .
ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றிஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக