செவ்வாய், 24 டிசம்பர், 2013

கோரக்கர் ஜீவ சமாதி



கடலூர் மாவட்டம், உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் மங்கலம்பேட்டையிலிருந்து 8 கி.மீ. பயணத்தில் உள்ளது முகாசாபரூர். இங்கு 800 வருடம் பழமைவாய்ந்த அன்னபூரணி சமேத விஸ்வநாதர் கோயில் இருக்கிறது. இவர்களை வணங்கி இங்கேயே ஜீவ சமாதியானவர் கோரக்கர் சித்தர். இத்தலம் குறித்தும் தனது ஜீவ சமாதி குறித்தும் பாடல்களால் அவர் பதிவு செய்துள்ளார். சிதிலமடைந்து கிடந்த இக்கோயில் குறித்து 26.4.2008 தேதியிட்ட தினகரன் ஆன்மிகமலர் மூலம் அறிந்த பக்தர்களால், இப்போது கும்பாபிஷேகம் கண்டு மிகச் சிறப்பாக அருள்பரப்பி நிற்கிறது ஆலயம். எளிமையான இந்த கிராமத்தில் பௌர்ணமி தோறும் கோரக்க சித்தர் வழிபாடு நடந்து வருகிறது. நியாயமான கோரிக்கைகள் யாவும் இவர் சந்நதியில் அமர்ந்து நினைக்கும் போதே நிறைவேறிவிடுகின்றன. இவரது ஜெயந்தி விழா 4.12.2012 அன்று ஆலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது . ஆலய தொடர்புக்கு: 9843702473. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக